search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரவுடி கும்பல்"

    • மீன்பிடி துறைமுகத்தில் இருந்த மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • சூர்யாவிற்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ராயபுரம்:

    எர்ணாவூர், நேதாஜி நகரை சேர்ந்தவர் சூர்யா என்கிற கேரளா சூர்யா (வயது 22).ரவுடி. இவர் மீது கொலை உள்பட மொத்தம் 7 வழக்குகள் உள்ளன.

    இந்நிலையில் நேற்று இரவு சூர்யா காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஏலம் விடும் இடத்திற்கு வந்தார்.

    அப்போது பின் தொடர்ந்து வந்த 7 பேர் கும்பல் திடீரென கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அவரை சுற்றி வளைத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சூர்யா அவர்களிடம் இருந்து தப்பிக்க ஓடினார்.

    ஆனால் மர்ம கும்பல் அவரை ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டினர். இதில் தலை, கழுத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த சூர்யா ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உடனே மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

    இதனை கண்டு மீன்பிடி துறைமுகத்தில் இருந்த மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து காசிமேடு மீன்பிடி துறைமுக போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிய சூர்யாவை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சியை வைத்து மர்ம கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பொன்னேரி பகுதியில் கத்தியுடன் ரவுடி கும்பல் பொதுமக்கள், வியாபாரிகளை மிரட்டி தாக்குவது அதிகரித்து உள்ளது.
    • ரவுடிகள் மீது புகார் கொடுக்க பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் மாதா சிலை அருகில் வாலிபர்கள் சிலர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் திருவேங்கடபுரம் பள்ளி அருகே ஆட்டோவில் வந்த டிரைவரை கத்தியை காட்டி மிரட்டி திடீரென தாக்கினர்.

    இதனை அவ்வழியே வந்த கல்லூரி மாணவர் ஒருவர் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் மாணவரை ஓட, ஓட விரட்டி தாக்கினர். மேலும் கத்தியாலும் திருப்பி பிடித்து சரமாரியாக அடித்தனர். இதில் பலத்த காயம் அடைந்த மாணவர் அங்கேயே மயங்கி விழுந்தார். இதனை பார்த்த சாலையில் சென்றவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் ரவுடி கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காயம் அடைந்த மாணவருக்கு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த தாக்குதல் தொடர்பாக இன்று காலை 2 பேரை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் இருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடந்த சில வாரங்களாக பொன்னேரி பகுதியில் கத்தியுடன் ரவுடி கும்பல் பொதுமக்கள், வியாபாரிகளை மிரட்டி தாக்குவது அதிகரித்து உள்ளது. அவர்கள் மீது புகார் கொடுத்தாலும் போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இதனால் ரவுடிகள் மீது புகார் கொடுக்க பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். ரவுடிகளின் அட்டகாசத்தை அடக்க சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×